Sunday, April 26, 2009

541. ஈழப்பிரச்சினையும் இந்தியத் தேர்தலும்

பெரிய அலசல் எதுவும் கிடையாது. சில எண்ணங்கள்:

1. ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவருக்கு சரியாக எடுத்துச் செல்லவில்லை என்ற கருத்துக்கு: எடுத்துச் சென்றிருந்தாலும் பெரிய அளவில் பலன் இருந்திருக்காது என்பது தான் யதார்த்தம். இதற்கு பிற மாநிலத்தவர் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இந்தியத்தமிழர்கள் பிற நாடுகளில் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதற்கே, தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், வேற்று நாட்டவரான ஈழத்தமிழருக்கு அவர்களிடம் எந்த விதமான அக்கறையை எதிர்பார்க்க முடியும் ?

2. மேற்கூறியதற்கு, இந்திய ஆங்கில மீடியாவின் பொறுப்பற்றத்தனமும் ஒரு முக்கியக் காரணம். ஈழத்தமிழர் படும் இன்னல்கள், அங்கு ஏற்படும் பெரும் உயிரிழப்பு குறித்து எதுவும் பேசாமல், இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த இடத்தைக் கைப்பற்றியது / அந்த இடத்தை கைப்பற்றியது என்று கிரிக்கெட் மேட்ச் வர்ணனையைத் தான் நெடுங்காலமாக செய்து வருகிறது :-( அங்கு நிலவும் மனித அவலம் குறித்த கண்ணோட்டம் இந்திய மீடியாவில் செய்திகளாகவோ, விவாதங்களாகவோ வரவில்லை!

3. எந்த தமிழக அரசியல் கட்சியும், உருப்படியாக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, இப்பிரச்சினையில் பெரும் நாடகம் ஆடியிருக்கிறது என்பதில் பெரும்பான்மையான தமிழர்களுக்கு உடன்பாடு இருக்கிறது. அதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவும் / தழுவ வேண்டும்.

அந்த ஒரு காரணத்திற்காக, அதாவது வாக்குகள் சிதறாமல் இருக்க தனித்துப் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் (பிஜேபி, தேமுதிக..) அல்லது சுயேச்சைகளுக்கும் (சரத்பாபுவும் சேர்த்து) இம்முறை வாக்களிக்காமல் இருப்பது நல்ல யுக்தியாக அமைய வாய்ப்புள்ளது. "தனி ஈழம் தான் தீர்வு" என்று தற்போது ஜெ முழங்குவது ஆச்சரியத்தை (ஏன் அதிர்ச்சியையும்!) தந்தாலும், அதிமுக கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவே தோன்றுகிறது! மத்தியில் அரசு மாறினால், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பித் தான் ஆக வேண்டும்!

4. இந்தியாவின் அறிவுஜீவி செக்யூலரிஸ்ட்களும், லிபரல்களும் வெகு தூரத்தில் நடக்கும் பாலஸ்தீனிய, இராக் பிரச்சினைகளுக்கு இங்கு ஓங்கி குரலெழுப்பி பெரிய அளவில் கலாட்டா செய்வார்கள். மீடியாவும் அவர்களுக்கு நல்ல விளம்பரம் அளிக்கும் ! இஸ்ரேல் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் (நியாயமானது தான்!) தெரிவிக்கும் இவர்கள், நம் அண்டையில் நடக்கும் (இலங்கை ராணுவத் தாக்குதலால் ஏற்படும்) அநியாயப் படுகொலை (இன ஒழிப்பு!) பற்றி வாய் திறக்க மாட்டார்கள் :-( ஹெஸ்பொல்லா ஒரு தீவிரவாத இயக்கம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!!

5. விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு: சரி, போரின் இறுதிக் கட்டத்தில் அப்படி நடக்கிறது என்பதை ஓரளவு ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக, போர் என்ற பெயரில், இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததற்கு (state terrorism) உலக நாடுகள் தரப்பிலிருந்து முனகலான கண்டனம் தான் கேட்டுக் கொண்டிருந்தது! (அதுவும், சீனாவும், பாகிஸ்தானும், இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று உளறி வருகின்றன!)

இப்போது தான், உலகெங்கும் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் சற்று உரக்க குரல் கொடுத்துள்ளன! ஆனால், ராஜபக்ஷே யார் பேச்சையும் இந்த நிமிடம் வரை கேட்கவில்லை என்பது நாம் அறிந்தது தான்...

எ.அ.பாலா

டெயில்பீஸ்: போர் நிறுத்தத்திற்கான மற்றும் பேச்சு வார்த்தைக்கான அமெரிக்க வேண்டுகோளை நிராகரித்து, நேற்று கோத்தபயா ராஜபக்ஷே "எங்களுக்கு எது சரி என்று எடுத்துச் சொல்ல நீங்கள் யார்?" என்று மிகவும் ஆணவமாக பேசியிருப்பது (இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி) குறிப்பிடத்தக்கது.

"The US state department should be ashamed of their request. If anybody tells me that, I will tell them to mind their own business. This is completely an internal issue..... We will not allow anyone to interfere"

இனிமேல் பேசி, வேண்டுகோள் விடுத்து, இலங்கைக்கு யாரும் எதையும் புரிய வைக்க முடியாது என்பது தெளிவு! மற்றவர்களை அண்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கும் ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கு இத்தனை திமிர் இருப்பதற்கு சீனக் கம்யூனிஸ்ட்களும் ஒரு முக்கியக் காரணம்.

அப்படியே கீழுள்ள வாக்குப்பெட்டியில் தயவு செய்து வாக்களித்து விட்டுச் செல்லவும்:


ஜெயலலிதாவின் தனி ஈழ ஆதரவு
ஆத்மார்த்தமான திடமான முடிவு
தேர்தல் ஸ்டண்ட்
பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்







13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட் !

Pot"tea" kadai said...

//The US state department should be ashamed of their request. If anybody tells me that, I will tell them to mind their own business. This is completely an internal issue..... We will not allow anyone to interfere"//

ஆணவம் அழிவுக்கு அறிகுறி. அமெரிக்கா பெருந்தலை என்பதனால் அல்ல. இலங்கையில் சீனாவின் இருத்தல் இந்திய என்னும் கூட்டமைப்பிற்கு பெரும் தலைவலி அதற்காக வேண்டியாவது இந்தியா ஒன்றுபட்ட இலங்கை என்று ஓழ் விடாமல் தனி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்.

அடுத்து திமிர்பிடித்த ராஜபக்ஷ சகோதரர்களின் பேச்சுக்களுக்கு ஹிலாரி எவ்வாறு கையாளுகிறாரென பார்ப்போம்.

ஆனால் எதிரியினால் உயிர்போகின்ற தருவாயில் எவருக்கும் வரும் ரெஸிஸ்டண்ட்"ன் அடி மிகப் பலமாக இருக்கும். அதிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இயலவே இயலாது.

said...

//இனிமேல் பேசி, வேண்டுகோள் விடுத்து, இலங்கைக்கு யாரும் எதையும் புரிய வைக்க முடியாது என்பது தெளிவு! மற்றவர்களை அண்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கும் ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கு இத்தனை திமிர் இருப்பதற்கு சீனக் கம்யூனிட்களும் ஒரு முக்கியக் காரணம்//

பாலா!
இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களின் தவறான கணிப்புக்களும் முக்கிய காரணம். இலங்கை விவகாரத்தில் மீண்டும் தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது. இனி இந்தியா சொல்லி இலங்கை கேட்காது போகும் நிலைதான் அதிகமாக வரும்.

- மலைநாடான்

said...

mm.. Nothing to say.
Good analysis.

Thank you.

- Kiri

enRenRum-anbudan.BALA said...

Pot"tea" kadai,
//அடுத்து திமிர்பிடித்த ராஜபக்ஷ சகோதரர்களின் பேச்சுக்களுக்கு ஹிலாரி எவ்வாறு கையாளுகிறாரென பார்ப்போம்.
//
ஹிலாரி இதை எப்படி அணுகுகிறார் என்பதில் தான் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்பதைச் சொல்ல முடியும்.

மலைநாடான்,
ஈழப்பிரச்சினையில், இந்தியா செய்தது மகா சொதப்பல்...

கிரி,
நன்றி.

said...

சரியான கருத்துகள்.

said...

உலகத் தமிழருக்கு அவசர வேண்டுகோள்
இன்று இரவு விஷ வாயு ,ரசாயன குண்டுகள் ,எரிவாயு குண்டுகள் போட்டு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொல்வதற்கு இலங்கை ராணுவம் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன
தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்
உடனடியாக செய்யுங்கள்
தமிழகத்தில் இப்போது நள்ளிரவு என்று தெரிந்தாலும் ஏதாவது செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்

Vijay said...

இவ்வளவு நாள் நிவாரணப் பொருட்கள் அனுப்ப் முனைந்த திராவிட ககட்சிகள் ஏன் இப்போது அது பற்றி ஒரு கட்சி/அரசியல்வாதியும் வாய் திறக்கவில்லை. இப்போது தானே ஈழத்தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களும், உணவு, ஆடை மருந்து மாத்திரை தேவை. புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் நிவாரணப் பொருட்களை அனுப்புவார்கள் போலிருக்க்கு

ஸ்ரீ.... said...

மிகச் சிறந்த பதிவு. உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு நானும் முயற்சி செய்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

ஸ்ரீ....

said...

பாப்பார பயலுவலுக்கு ஜெயலலிதாவை ஆதரிக்க காரணமெல்லாம் தேவையில்லை. இருந்தாலும் ஒப்புக்கு சப்பாணியா இந்த முறை ஈழம். ஈழம் இல்லைன்னா வேறு ஏதோ ஒரு காரணம்.

வாழவந்தான் said...

நீண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் இல்லையே?
பாலா சார் நலமா?
இல்லை சம்மருக்கு குடும்பத்துடன் ஊருக்கு போயாச்சா?

enRenRum-anbudan.BALA said...

வாழவந்தான்,

விசாரிப்புக்கும், அன்புக்கும் மிக்க நன்றி, நண்பரே !

நலம் தான். ஊரில் தான் இருக்கிறேன். ஒரு துக்கம் காரணமாக பதிவுகளில் மனதைச் செலுத்த இயலவில்லை :(

http://balaji_ammu.blogspot.com/2009/04/540.html

சீக்கிரம் வருகிறேன். மீண்டும் நன்றி.

அன்புடன்
பாலா

வாழவந்தான் said...

//நலம் தான்.// இது போதும்
சுட்டியை பார்க்கதேவயில்லை நான் இன்னும் ஆனந்தனை மறக்கவில்லை.
இதுதான் காரணமாயிருக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. மன்னிக்க!

Wish you to come back to normal and thanks for the reply

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails